சில புதிய கவிதைகள்
இப்படி உணர்ந்ததுண்டா?
பழைய ஒருத்தி இறந்துவிட்டாள்
வேறொருத்தி தோன்றிவிட்டாள்
மடிந்து மறைந்த தாழம்பூ
மல்லிகையாகிவிட்டது
வலி தந்த அம்பைப்
பிய்த்தெறிந்தாகிவிட்டது
ஒரு தழும்பு அனாதிகாலத்தின்
கவர்ச்சியோடு
வெற்றுடலில் மினுங்குகிறது
புன்னகைக்கிறாள்
குளித்துமுடித்தவுடன்
கட்டாத முடி முகத்தில் அலையும்
புதிய காட்டின் புன்னகை
ஆம், காதல் இன்னும்
மூச்சுவிடுவதை நிறுத்தவில்லை
மல்லிகைக்குள் புழு ஊர்கிறது
ஒருத்தியிலிருந்து
இன்னொருத்தி பிறக்கும்போது
ஒருவனிடமிருந்து இன்னொருவனும்
பிறக்கத்தான்...
கொள்ளை நோய் குறித்த என் கவிதைகள் ஆங்கிலத்தில்
courtesy: The Atlantic
ஸ்க்ரால்.இன் மின்னிதழில் என். கல்யாண ராமனின் மொழியாக்கத்தில் வெளிவந்திருக்கும் என் கவிதைகளுக்கான சுட்டி:
https://scroll.in/article/962399/nothing-imagined-is-excessive-eleven-poems-for-and-from-a-world-gripped-by-a-pandemic
நிகனோர் பர்ரா
ரோலர் கோஸ்டர்
அரை நூற்றாண்டாக
சீரியஸ் முட்டாள்களின் சொர்க்கமாக
கவிதை இருந்தது
நான் வந்து
என் ரோலர் கோஸ்டரைக் கட்டும் வரை.
விரும்பினால் மேலே செல்லுங்கள்.
வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும்
ரத்தம் கொட்டிக்கொண்டு
கீழே வந்தீர்கள் என்றால் அது என் தவறல்ல.
வாசிப்புக்கான நோபல் பரிசு
வாசிப்புக்கான நோபல் பரிசை
எனக்குத்...
கவிதைகளின் தீவுக்கூட்டம்: சகவாழ்வை எழுதிய டெரெக் வால்காட்
டெரெக் வால்காட் 1992இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசால் கௌரவிக்கப்பட்ட முதல் கரீபிய இலக்கியவாதி. பரிசுக்கு இரு வருடங்கள் முன்புதான் வால்காட்டின் காவியம் போன்ற கவிதை நூலான ஒமெரோஸ் வெளியாகி விமர்சகர்களாலும் நாளிதழ்களாலும் பாராட்டப்பட்டிருந்தது....