விஷ்ணுபுரம் விருது விழா, 2021
விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விழா டிசம்பர் 25, 26 தேதிகளில் கோவையில் ராஜஸ்தானி சங் அரங்கத்தில் நடைபெற உள்ளது. விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்படவிருக்கிறது. சென்ற முறை 2019 டிசம்பரில் நடந்த...
கவிதைகளின் தீவுக்கூட்டம்: சகவாழ்வை எழுதிய டெரெக் வால்காட்
டெரெக் வால்காட் 1992இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசால் கௌரவிக்கப்பட்ட முதல் கரீபிய இலக்கியவாதி. பரிசுக்கு இரு வருடங்கள் முன்புதான் வால்காட்டின் காவியம் போன்ற கவிதை நூலான ஒமெரோஸ் வெளியாகி விமர்சகர்களாலும் நாளிதழ்களாலும் பாராட்டப்பட்டிருந்தது....
கொள்ளை நோய் குறித்த என் கவிதைகள் ஆங்கிலத்தில்
courtesy: The Atlantic
ஸ்க்ரால்.இன் மின்னிதழில் என். கல்யாண ராமனின் மொழியாக்கத்தில் வெளிவந்திருக்கும் என் கவிதைகளுக்கான சுட்டி:
https://scroll.in/article/962399/nothing-imagined-is-excessive-eleven-poems-for-and-from-a-world-gripped-by-a-pandemic
நிகனோர் பர்ரா (2)
சிலுவை
எப்போதாவது
சிலுவையின் திறந்த கைகளுக்கு
நான் கண்ணீரோடு திரும்புவேன்
எப்போதாவது
சிலுவையின் பாதத்தில்
மண்டியிட்டு விழுவேன்
சிலுவையை
மணம்புரியாதிருப்பது சிரமம்:
எப்படி அவள் தன் கைகளில் என்னை ஏந்தியிருக்கிறாளெனப்
பார்த்தீர்களா?
இன்றோ
நாளையோ
நாளை மறுநாளோ நடக்காது அது
ஆனால்
நடக்கவேண்டிய விதத்தில் நடக்கும்
இப்போதைக்கு சிலுவை ஒரு ஆகாய விமானம்
தன் கால்களை அகட்டும்...
பிள்ளைகள் நிலவொளி புகுந்த அறையில் கிடக்கிறார்கள்
அவர்கள் வீட்டில் டம்ப்பெல்கள் இருக்கின்றன
கணவனோ மனைவியோ அவற்றைப் பயன்படுத்தியிருக்கலாம்
கல்லூரிக்குச் செல்லும் பிள்ளைகள் பயன்படுத்தியிருக்கலாம்
ஆரோக்கியமான உடல்வாகு
நாள் தவறாத தேகப் பயிற்சி
குடும்ப ஆரோக்கியத்தில் கவனம்
இப்படி எத்தனை குடும்பம் உங்களுக்கும் எனக்கும் தெரியும்?
“பாப்பா படுக்கப்போகும்முன் ப்ரஷ் செய்துவிட்டுப்...
சில புதிய கவிதைகள்
இப்படி உணர்ந்ததுண்டா?
பழைய ஒருத்தி இறந்துவிட்டாள்
வேறொருத்தி தோன்றிவிட்டாள்
மடிந்து மறைந்த தாழம்பூ
மல்லிகையாகிவிட்டது
வலி தந்த அம்பைப்
பிய்த்தெறிந்தாகிவிட்டது
ஒரு தழும்பு அனாதிகாலத்தின்
கவர்ச்சியோடு
வெற்றுடலில் மினுங்குகிறது
புன்னகைக்கிறாள்
குளித்துமுடித்தவுடன்
கட்டாத முடி முகத்தில் அலையும்
புதிய காட்டின் புன்னகை
ஆம், காதல் இன்னும்
மூச்சுவிடுவதை நிறுத்தவில்லை
மல்லிகைக்குள் புழு ஊர்கிறது
ஒருத்தியிலிருந்து
இன்னொருத்தி பிறக்கும்போது
ஒருவனிடமிருந்து இன்னொருவனும்
பிறக்கத்தான்...
ஸ்ரீவள்ளி கவிதைகள் (1)
ஒரு நாள் மொத்த வசந்தத்தையும்
ஒரு ஊஞ்சலையும்
கொண்டுவரும்போது
ஒரு எறும்பு ஒரு கிடங்கு சர்க்கரை மூட்டைகளைக்
கொண்டுவருவது மாதிரி
அது சர்க்கரை மூட்டையின் மேல் நின்று
அறிவிக்கிறது
“எல்லா ஆசிகளும் தரப்பட்டுவிட்டன”
மனதின் வடக்கு தெற்குக் கண்டங்களில்
சாந்தமுற்ற பீடபூமிகளில்
உதவாக்கரை தீவுகளில்
பத்து தலைப் பாம்பு...
ஸ்ரீவள்ளி கவிதைகள் (2)
முன்னொரு இரவில்
உடல்கள் ஒளிர்ந்தன
புவியீர்ப்பு விசையிலிருந்து
விடுபட்டுச் சுழன்ற உடல்கள்
இரு ஜோடி ஒளிர் கால்கள்
கால்களைப் பின்னின கொடிகளாக
இரு ஜோடி ஒளிர் கைகள்
முகங்களை ஏந்திக் காற்றில் அலைந்தன
நானாகவும் இன்னொருத்தியாகவும்
அவனோடும் அவனோடும் இருந்தபோது
நாளங்களின் செம்பொன் திரவத்தில்
கடவுளை விட இனிய...
சரஸ்வதி
இன்று சரஸ்வதிக்கான திருநாள். சொல்லில் ஒலியில் எழுத்தில் படிப்பில் கலையில் ஈடுபட்டுத் திளைப்பவர்களுக்கான நாள். தெய்வத்துக்கு அப்பால், அப்படியொன்று இருந்தால், மொழியின் குறியீட்டுத்தளத்தில் குறியும் பொருளும் பிணைந்தும் பிரிந்தும் இயக்கம்கொள்வதை நினைவுகூரவும் ஒரு...
தன்னில் அமிழ்ந்து தன்னை அழித்தல்: அபியின் கவிதைகள்
அபியின் கவிதைகள் பொதுவாக நான் வாசிக்கும் கவிதைகளிலிருந்தும் எனக்குரிய கவிதைப் பாணிகளிலிருந்தும் மாறுபட்டவை. பல வகைகளில் எழுதப்படுவது கவிதை என்ற வகையில் கவிதைக்கே உரித்தான பன்மைத்தன்மையின் சிறப்பு இவற்றைப் படிக்கையில் மீண்டும் உறுதிப்பட்டது.
(நிழற்படத்துக்கு...